இரு நிமிடத்துக்கு ஒருமுறை அலெக்ஸாவை அலற விடும் இந்தியர்கள்…!


இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை இந்தியர்கள் அலெக்ஸாவிடம் ‘நீ என்னை கல்யாணம் செய்து கொள்வாயா?’ என கேட்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமேசான் நிறுவனம் உருவாக்கிய அலெக்ஸா என்னும் மெய்நிகர் செயற்கை நுண்ணறிவு உதவியாளர் இந்திய பயனாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறது.

வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் இயங்கும் அலெக்ஸா பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இணையதள உதவியுடன் பதில்களை வழங்குவது மட்டுமல்லாமல், ஒரு ரோபோவை போன்றும் செயல்படுகிறது.

இந்த அலெக்ஸா சாதனம் இந்தியர்கள் மத்தியில் நிறைய அன்பையும் பாசத்தையும் பெற்று வருவதாக ஆய்வில் தெரியவந்து உள்ளது.

இந்நிலையில், அலெக்ஸா சாதனத்திடம் 2019-ம் ஆண்டு இந்தியர்கள் அதிகமாக கேட்ட கேள்விகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன.

அதில் 2019-ம் ஆண்டு தரவுகளின் மூலம் தொகுக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில், தொழில்நுட்பத்தை அதிகம் விரும்பும் இந்தியர்கள், டிஜிட்டல் உதவியாளரான அலெக்ஸாவை கூடுதலாக விரும்புவது தெரிய வந்துள்ளது. அதன்படி இந்தியர்கள் ஒரு வாரத்தில் லட்சக்கணக்கான முறை அலெக்ஸாவுடன் பேசுகின்றனர்.

அவ்வாறு பேசும் இந்தியர்களில் அதிகமாக அலெக்ஸாவிடம் கேட்கப்படும் கேள்வி என்ன தெரியுமா? ஒரு நிமிடத்திற்கு 8 முறை ‘நீ எப்படி இருக்கிறாய்’? (How are you) என அலெக்ஸாவிடம் ஆங்கிலத்தில் நலம் விசாரிக்கின்றனர். அதேபோல் நிமிடத்திற்கு ஒரு முறை ’அலெக்ஸா நான் உன்னை காதலிக்கிறேன்’ (Alexa, I Love You) என கேட்கின்றனர்.

இதையும் தாண்டி அடுத்த நிலைக்கு சென்று இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை ’’அலெக்ஸா நீ என்னை கல்யாணம் செய்துகொள்வாயா?’’ (Alexa, Will you marry me) என கேள்வி கேட்டு ஒரு மின்பொருள் சாதனத்தையே அலறவிட்டுள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!