தூக்கமே இல்ல.. இனி வருடத்துக்கு ஒரு படம் தான் – யோகிபாபு உருக்கம்..!


தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு, இனி வருடத்துக்கு ஒரு படம் அப்படி நடிப்பேன் என கூறியுள்ளார்.

தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ள யோகிபாபு, ரஜினி, விஜய், அஜித் என அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து விட்டார். கடந்த வருடம் மட்டும் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த யோகிபாபு, தற்போது கைவசம் 16 படங்கள் வைத்துள்ளார். இதுதவிர பன்னி குட்டி, மண்டேலா போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
இவர் ஒரு நாள் சம்பளமாக ரூ.5 லட்சம் வாங்குவதாக கூறப்படுகிறது.

சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: திரையுலகுக்கு நான் அறிமுகமாகி, நகைச்சுவை நடிகராக பிரபலமானதும் தொடர்ந்து இரவு-பகல் பார்க்காமல் வேலை செய்தேன். இதனால் என் தூக்கம் போனது. களைப்பாக உணர்ந்தேன். கண்கள் தூக்கத்துக்கு ஏங்கின. உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால், இப்போது இரவு-பகலாக நடிப்பதில்லை. கதாநாயகனாக அல்ல, கதையின் நாயகனாக வருடத்துக்கு ஒரு படம் நடிப்பேன். மற்ற படங்களில், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன்’’ என யோகி பாபு கூறியுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!