சசிகலாவோ, நானோ துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை.- தினகரன்

சிறையில் இருந்து சசிகலா விரைவில் வெளியே வருவார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெரியாரைப்பற்றி பேசும் போது உண்மைக்கு புறம்பான தகவல்களை நடிகர் ரஜினிகாந்த் பேசி இருப்பது வருத்தம் அளிக்கிறது. தந்தை பெரியார் தனி ஒரு மனிதர் அல்ல, அவர் ஒரு மிகப்பெரிய இயக்கம். தந்தை பெரியார் குறித்து ரஜனிகாந்த் பேசியது கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடக்கவில்லை. கம்பெனி தான் நடை பெற்று வருகிறது. இதை மககள் ஆட்சியாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. பெண்கள் மீதான தாக்குதல்களும், பாலியல் வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சசிகலா குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்புவது ஏற்புடையதல்ல, அவர் சிறையில் இருந்து வெளியே வருவதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறையில் இருந்து சசிகலா விரைவில் வெளியே வருவார். சசிகலாவோ, நானோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!