காதலியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட செல்போன் கடை ஊழியர்..!


காதலியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட செல்போன் கடை ஊழியரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் ஆலம்பாடி புதுக்காலனியை சேர்ந்தவர் கலையரசன் (வயது 24). இவர் கடலூர் நத்தவெளியில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி இருந்தார். அங்குள்ள செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அதே கடையில் 22 வயது இளம்பெண் ஒருவரும் வேலை பார்த்து வந்தார்.

அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. அவர்கள் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

சம்பவத்தன்று கலையரசன் தனது காதலியை தனது அக்காள் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு யாரும் இல்லை. பின்னர் அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

அதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் திருப்பூர் சென்றனர். அங்கு ஒரு பனியன் கம்பெனியில் வேலையில் சேர்ந்தனர். அப்போது அவர் தனது காதலியிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் நீ உன்னுடைய நிர்வாண படத்தை எனக்கு செல்போனில் அனுப்ப வேண்டும் என்று கூறினார். அதன்பேரில் அவரும் தன்னுடைய நிர்வாண படத்தை கலையரசனுக்கு அனுப்பினார்.

அதனை தொடர்ந்து கலையரசன் தனது காதலியிடம் மேலும் நிர்வாண படங்களை கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இதனால் உஷாரான அந்த இளம்பெண் கலையரசனை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கலையரசன், பேஸ்புக்கில் அந்த இளம்பெண்ணின் நிர்வாண படங்களை பதிவு செய்தார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக கடலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலியின் நிர்வாண படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்த கலையரசனை கைது செய்தனர்.

அதன் பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் வைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கலையரசன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!