பேசியதற்காக மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது – ரஜினிகாந்த் அதிரடி..!


1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது, கற்பனையாக எதுவும் நான் கூறவில்லை என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது;

துக்ளக் விழாவில் 1971 ஆம் ஆண்டில் சேலத்தில் நடந்த பேரணி குறித்து நான் பேசிய பேச்சு சர்ச்சையாக உள்ளது. இல்லாத ஒன்றை கற்பனையான விஷயத்தை நான் கூறவில்லை. கேள்விப்பட்டது மற்றும் அவுட்லுக் பத்திரிகையில் வந்ததைத்தான் கூறினேன். இதற்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார்கள். மன்னிக்கவும், நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

நான் பார்த்ததை நான் சொல்கிறேன். அவர்கள் பார்த்ததை அவர்கள் கூறுகிறார்கள். 1971 ஆம் ஆண்டில் நடந்தது மறக்கப்படவேண்டிய சம்பவம் என கூறினார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!