சீமானுடன் ஒரு செல்பி.. அரசியலில் தொப்புக்கடீர்னு குதிக்கும் மீரா மிதுன்


தான் அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டதாக நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 3 பிரபலம் மீரா மிதுன் தனக்கு அரசியலுக்கு வரும் ஆசை இருப்பதாக முன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து பேசியதுடன் செல்ஃபி எடுத்துள்ளார். அந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டார். அதை பார்த்து ரசிகர்கள் சந்தேகப்பட்டது போன்றே நடக்கிறது.

அரசியல்

மீரா மிதுன் அரசியலுக்கு வருகிறாராம். தான் அரசியலுக்கு வந்து புது சரித்திரம் படைக்கும் நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார் மீரா. இதை பார்த்த அவரின் தீவிர ரசிகர்கள்(இருக்காங்க, நம்புங்கப்பா) அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் வருவங்கால முதல்வர் மீரா தான் என்று தற்போதே கோஷமிடத் துவங்கிவிட்டார். இதை பார்க்கும் மற்றவர்களோ கொடுத்த காசுக்கு மேல கூவுறான் மொமன்டா இருக்கே என்கிறார்கள்.


எந்த கட்சி?

மீரா தான் எந்த கட்சியில் சேர்கிறேன் என்பதை தெரிவிக்கவில்லை. அதற்குள் அவர் பாஜகவில் சேரப் போவதாக நெட்டிசன்கள் பேசத் துவங்கிவிட்டார்கள். மீரா மிதுனின் கடின உழைப்பால் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று தெரிவித்துள்ளனர். அட பொறுங்கப்பா, எந்த கட்சியில் சேர்வது என்று அவரே அறிவிக்கட்டும்.

வேண்டாம் மீரா

ஆன்லைனில் உள்ள ரசிகர்களை நம்பி அரசியலில் இறங்க வேண்டாம் மீரா. ட்விட்டரில் உங்களை வருங்கால முதல்வர் என்று சொல்லும் ஆட்கள் நிஜத்தில் ஓட்டு போட மாட்டார்கள். ஆன்லைன் சகவாசம் ஆன்லைனில் மட்டும் தான். அது நிஜத்தில் இருக்காது. இது புரியாமல் அரசியலுக்கு வர வேண்டாம். நீங்கள் நினைப்பது போன்று அரசியலில் சரித்திரம் படைப்பது அவ்வளவு எளிது அல்ல என்று சிலர் அறிவுரை வழங்கியுள்ளனர்.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!