பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளினியாக பணிப்புரிந்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தனது சிறு வயது முதல் மேடை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார். மேலும் பல சின்னத்திரை தொடர்களில் நடித்த அவர் வெள்ளிதிரையிலும் நடித்துள்ளார்.
மேலும் விஜய் டிவியில் காபி வித் டிடி,ஜோடி, மற்றும் விருது விழாக்கள் போன்ற பெரும்பாலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.அதனை தொடர்ந்து தற்போது ஸ்பீட் கேட் செட் கோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் அவர் சமீபத்தில் வெளிவந்த பவர் பாண்டி, சர்வதாள மயம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இலங்கை சென்ற டிடியை பார்த்து ஒரு ரசிகை மிகவும் சந்தோஷம் அடைந்ததுடன் அவரைக் கட்டிப்பிடித்து அழும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.-Source: spark
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!