முதல்முறையாக அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது ஈரான்.!


அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக இது பார்க்கப்படுகிறது.

உலகிலேயே தீவிரவாதத்திற்கு எதிரான ஒரே சவுக்கிதார் நாங்கள்தான் என்பது போல அமெரிக்கா செயல்பட்டு வந்தது. அமெரிக்கா நினைத்தால் எந்த ஒரு போராளி குழுவையும் தீவிரவாத அமைப்பு ஒட்னரு முத்திரை குத்த முடியும்.

யாரை வேண்டுமானாலும் தீவிரவாதி என்று கூறி, தடை செய்ய முடியும். உலகம் முழுக்க தீவிரவாத அமைப்புகளை அமெரிக்கா இப்படித்தான் கட்டுப்படுத்தி வருகிறது.

ஆனால் இப்போது புதிய திருப்பமாக அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஆம் நம்புங்கள் ஒரு நாட்டின் ராணுவத்தை, இன்னொரு நாடு தீவிரவாத அமைப்பு என்று அறிவிப்பது இதுதான் முதல்முறை. உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக இது பார்க்கப்படுகிறது.

இதற்காக ஈரான் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனை தீவிரவாத இயக்க தலைமையகமாக அறிவித்தது. அமெரிக்காவின் முப்படைகளும் தீவிரவாத இயக்கம்தான் என்று ஈரான் கூறியுள்ளது.

இந்த முப்படைகளை தீவிரவாத இயக்கம் என்று அறிவித்து இருப்பதால், அதன் தலைவர் அதிபர் டிரம்ப் தீவிரவாதி என்று பொருள்படுவார். இந்த அறிவிப்பு அமெரிக்காவை உணர்வு ரீதியாக சீண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலடியாக ஈரானை அமெரிக்கா விரைவில் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம் நடத்தியது. ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி அந்நாட்டை மொத்தமாக கட்டுப்படுத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!