நடிகை ஸ்ரீதேவியின் கல்லறையில் வாழ ஆசைப்படும் ராம் கோபால் வர்மா.. சர்ச்சை பதிவு..!


ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா. அடிக்கடி எதையாவது பேசி சர்ச்சையையும் உண்டு பண்ணுவார். தற்போது பியூட்டிபுல் என்ற படத்தை எடுத்துள்ளார். மிகவும் கவர்ச்சிகரமான படமாக உருவாகி உள்ளது.

டிரைலரிலேயே ஏகப்பட்ட முத்தக்காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இந்நிலையில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ராம் கோபால் வர்மா, தனக்கு உயிர் வாழ ஒரு மணி நேரம் மட்டுமே கிடைக்கிறது என்றால், அதனை ஸ்ரீதேவியின் கல்லறையில் வாழ ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும் தான் இறந்த பின் அவரது ஸ்ரீதேவியின் கல்லறைக்கு அருகே தனது உடலையும் தகனம் செய்ய வேண்டும் என உருக்கமாக கூறியுள்ளார். இவரின் இந்த பதிவு விமர்சனத்திற்குள் உள்ளாகி உள்ளது. ஸ்ரீதேவி மரணம் அடைந்தபோது, அந்த செய்தி வெறும் கனவாக இருக்க கூடாதா என உருக்கமாக பதிவிட்டு இருந்தார்.-Source: dinamalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!