எம்.ஜி.ஆர். வேடமணிந்து பிரசாரம் செய்து கலக்கும் திருவடி..!


திண்டுக்கல் பகுதியில் இளைஞர் ஒருவர் எம்.ஜி.ஆர். வேடமணிந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தேர்தல் வந்தாலே ருசிகரங்களுக்கு பஞ்சம் இருக்காது. வாக்காளர்களை கவர்வதற்காக புதுமையான முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதும், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என கலகலக்க செய்வதும் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் திண்டுக்கல் பகுதியில் இளைஞர் ஒருவர் எம்.ஜி.ஆர். வேடமணிந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திண்டுக்கல் வடமதுரை அருகே உள்ள கெங்கையூரைச் சேர்ந்தவர் திருவடி (வயது 37). இவர் உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆர். வேடமணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இவரை கண்டதும் பொதுமக்கள் ஆர்வத்தோடு அருகில் வந்து செல்பி எடுக்கிறார்கள். இவரிடம் கைகுலுக்கி ஆரவாரம் செய்கின்றனர். இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் எம்.ஜி.ஆர். வேடமணிந்து வாகனத்தில் சென்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!