உறவில் பெண்கள் ஆண்களிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார்கள்..!!


ஆண் பெண் இருவரும் ஒருவரோடு ஒருவர் ஈர்க்கப்படுவதுதான் இயற்கையின் விதி. ஆனால் இந்த ஈர்ப்பின் அடிப்படை எது என்பதே பலருக்கும் புரிவதில்லை.

பிரிவொன்று நேரும் எனத் தெரிந்தும் பிரியத்தை குறையாமல் கொடுக்கும் மனம் கொண்டதுதான் காதல். இணைந்து வாழ்வது மட்டுமே காதல்.
அன்பு மட்டுமே நீங்கள் கொள்ளும், சுகம், துக்கம், ஏக்கம், கோபம், அக்கறை, வெறுப்பு, பொறாமை, ஈர்ப்பு, என அனைத்து உணர்வுகளின் பிரதிபலிப்பிற்கு அடிப்படையாக இருக்கும். அன்பு கொள்ளாத ஒரு நபரின் மேல் இந்த உணர்வுகளை வெளிப்படுத்தவே முடியாது.

ஒரு பெண் ஒரு ஆணை விரும்பும்போது அவள் இந்த அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்திறாள் என்றால் அவள் அவன் மேல் கொண்டிருக்கும் அன்பு தான் காரணம்.


ஒரு பெண் ஒரு ஆணிடம் எதிர்ப்பார்ப்பது அவர்களுடைய உண்மையான அன்பை மட்டுமே. கண்ணும் கண்ணும் பல மணி நேரங்கள் கவி பாடத் தேவையில்லை. உங்களின் அன்பின் வெளிப்பாடான அக்கறையை மட்டும் காட்டுங்கள் போதும். அவள் என்ன செய்கிறாள் என்பதை நீங்கள் கேட்டு தெரியாவிட்டாலும் அவள் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளும்போது கேளுங்கள்.

நீங்கள் தூரமாக இருந்தாலும் அவளின் அருகில் இருக்கும் உணர்வை அவளுக்குக் கொடுங்கள். அதுதான் அன்பு. நீங்கள் உங்கள் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தும் நபராக இல்லாவிட்டாலும் உங்களின் பார்வை மட்டுமே அவள் மீது திருப்புங்கள். அதன் அர்த்தம் புரிந்தவளாகத்தான் உங்களை விரும்பும் பெண் இருப்பாள்.

தான் விரும்பும் ஆளைப்பற்றி ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் நினைக்கின்றனர். இதனால் தான் உங்களிடம் பேசுவதையும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வதிலும் அதிக அக்களையும் ஆர்வமும் காட்டுகின்றனர். இந்த ஆர்வம் சில ஆண்களுக்கு தேவையில்லாததாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருக்கும். முக்கியமான விஷயமாக இருந்தால் நானே சொல்ல மாட்டேனா என்பது ஆண்களின் எண்ணம் ஆண்களுக்கு உண்டு. ஆனால் ஆணை விரும்பும் பெண்ணுக்கு அந்த ஆண் செய்யும் எல்லாமே முக்கியமானதாகத் தான் படும்.


தான் விரும்பும் ஆண் நிற்பது, நடப்பது, பேசுவது என எல்லாவற்றையும் தானே செய்வது போல மனதில் நினைத்துக் கொண்டிருப்பவள் தான் பெண்.

உங்களைப் பற்றி அக்கறை படும் பெண்ணுக்கு உங்களுடைய அனைத்து விஷயங்களுமே முக்கியமானதாகத்தான் இருக்கும்.

உங்களின் சுக துக்கங்கங்களில் அவளால் எந்தவொரு மாற்றத்தைக் கொண்டு வரமுடியாவிட்டாலும் உங்களின் எண்ணங்களை அவளிடம் பரிமாறிக்கொண்டாலே போதும். எல்லா நிலையிலும் தான் விரும்பும் ஆணுக்கு தான் துணையாகவும் தோளில் சாய்த்து ஆறுதல் சொல்பவளாகவும் இருக்கிறோம் என்று மனதுக்குள் சந்தோஷப்படுவாள்.


பெண்களுக்கு சர்பிரைஸ் கொடுப்பது, பரிசு கொடுப்பது பிடிக்கும் தான். ஆனால் நீங்கள் அவள்மீது அக்கறையும் அன்பும் செலுத்துங்கள். அதை அவள் விலைமதிக்க முடியாத பரிசாகக் கருதுவாள்.

நீங்கள் விரும்பும் பெண்ணிடம் நீங்கள் அவரைப் பற்றி அதிகம் கேட்கத் தேவையில்லை. ஏனென்றால் ஒரு பெண் தான் விரும்பும் ஆணிடம் ஏதாவது பேசிக்கொண்டே இருக்க நினைப்பாள். அதனால் தன்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் தன் பிரியமானவரிடம் பகிர்ந்து கொள்ளவே ஆசைப்படுவாள். ஆண்கள் வேண்டுமானால் அதுபோன்ற சமயங்களில் அவள் சொல்வதைக் குட்காமல் உதாசீனப்படுத்திவிடுவது உண்டு.


ஆனால் பெண்களின் மனநிலை இது அல்ல. அவள் உங்கள் மீது கொண்டுள்ள அக்கறையின் மேல் அக்கறை கொண்டு அவளை உங்களில் ஒருத்தியாக நடத்துங்கள். நீங்கள் நினைப்பதை அவளுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். அவளை நலம் விசாரிக்க யாரும் இல்லாவிட்டாலும் அவள் நலம் விசாரிக்க நீங்கள் ஒருத்தர் மட்டுமே இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் ஏதும் பேசாமல் அவளை அரவணைத்து நெற்றியில் முத்தமிட்டாலே தன்னுடைய கஷ்டங்களை மறந்தவளாக இருப்பாள். காதல் மிக சுலபமான ஒன்று. அவள் உங்களிடம் எதிர்ப்பார்ப்பது உங்களின் அன்பு மட்டுமே!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!