பாய்ந்து வந்த தோட்டா.. சினிமா பாணியில் உயிர் பிழைத்த காவலர்..!


எதிரி துப்பாக்கியால் சுட்டு கழுத்தில் அணிந்திருக்கும் டாலர், பையில் இருக்கும் பர்ஸ் தடுத்து ஒருவர் உயிர் பிழைப்பதை சினிமாவில் தான் பாத்திருப்போம். ஆனால் தற்போது அது உண்மையாகவே நிகழ்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமைத் திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் போராட்டங்களும், பேரணிகளும் நடந்து வருகின்றன. ஆரம்பத்தில் அமைதியாக இருந்த உத்தரப் பிரதேச மாநிலம் பின்னர் போராட்டம், வன்முறை, உயிர்பலி என போராட்டக்களமாக மாறியது. இந்நிலையில் அங்குள்ள பிரோசாபாத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி கல் எரிந்து தாக்கினர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்ட ஆரம்பித்தனர்.

அப்போது விஜேந்தர் குமார் (27) என்ற கான்ஸ்டேபிளை போராட்டக்காரர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது விஜேந்தர் குமாரை சுட்ட குண்டு நெஞ்சுப்பகுதியில் சேஃப்டி ஜாக்கெட்டையும் கிழித்து கொண்டு சட்டை பாக்கெட்டில் இருந்த பர்சில் சிக்கியுள்ளது.

பின்னர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துக்கொண்டோம் என நினைத்த அவர், பர்ஸுக்குள் இருந்த நாணயத்தால் தான் தோட்டா தன்னை துளைக்கவில்லை என்பதை கண்டு வியந்துள்ளார்.-Source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!