நீதிபதியின் முன்னிலையில் பாலியல் வீடியோவைப் பார்த்த திலீப்!


கேரளாவில் பிரபல நடிகைக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட காட்சிகளை, நடிகர் திலீப் உள்ளிட்ட 6 பேர் கொச்சி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் பார்வையிட்டனர்.

கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மலையாள நடிகை ஒருவரை காரில் ‌கடத்திச் செல்லப்பட்டு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், அதை வீடியோ எடுத்ததாகவும் கூறப்படும் வழக்கில், கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக கூறப்படும் வீடியோவை பார்க்க அனுமதிக்க வேண்டும் என இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட திலீப் உள்ளிட்டோர் ‌உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தனர். வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கூட்டாக சேர்ந்து வீடியோவை பார்க்க அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்திருந்தது.

இந்த நிலையில் நடிகர் திலீப் உள்ளிட்ட 6 பேர் கொச்சி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் அந்த வீடியோவை பலத்த பாதுகாப்புடன் பார்வையிட்டனர். வீடியோ‌ தொடர்பாக அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.-Source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!