சூர்யாவுடன் ஒன்றாக நடித்தால் சண்டை வரும் – ஜோதிகா அதிரடி..!


கார்த்தியுடன் தம்பி படத்தில் நடித்திருக்கும் ஜோதிகா, சூர்யாவுடன் நடித்தால் சண்டை வரும் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தம்பி. இப்படம் குறித்து ஜோதிகா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சூர்யா, கார்த்தி யாருடன் நடிப்பது கஷ்டம்?
சூர்யாவுடன் நடிப்பது தான் கஷ்டம். கார்த்தியுடன் நடிப்பது எளிது. சூர்யாவுடன் நடிக்கும்போது அடிக்கடி செல்ல சண்டைகள் வரும்.

சூர்யா ஏதும் டிப்ஸ் கொடுப்பாரா?
அப்படி எதுவும் எனக்கோ, கார்த்திக்கோ கொடுத்தது இல்லை.

எப்படி கதைகள் தேர்வு செய்கிறீர்கள்?
எனக்கு நடிக்க வாய்ப்பு இருக்கும் கதைகளாக தேர்வு செய்கிறேன். பழைய குறும்பு நடிப்புகளை குறைத்துக்கொள்கிறேன். எனக்கும் வயதாகிறது எல்லவா?

தம்பி தயாரிப்பில் நடித்த அனுபவம்?
17 வயதிலேயே நடிக்க வந்து அடுத்த சில ஆண்டுகளில் சென்னையில் செட்டிலாகி விட்டேன். இந்த படத்தின்போது தான் தம்பியுடன் அதிக நேரம் செலவழித்தேன். நிறைய பேசினோம்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!