இவ்வளவு பாசக்கார பையனா இருக்கானே.. தாய் மீது மோதிய கார்… வைரல் வீடியோ


சீனாவில் சிறுவன் ஒருவர் தன் தாய் மீது மோதிய காரை காலால் எட்டி மிதித்தும் ஆவேசமாகக் குரல் எழுப்பியும் தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.

சீனாவின் சாங்கிங் மாகாணத்தில் பெண் ஒருவர் தனது மகனை வலது கையில் பிடித்தவாறு சாலையைக் கடக்க முற்பட்டார். அப்போது அவரின் இடது புறத்திலிருந்து வரும் கார் ஒன்று அப்பெண் மீது மோதுகிறது. இதனால் நிலைதடுமாறி அப்பெண் மகனுடன் சாலையில் தடுமாறி விழுகிறார். உடனே தாயை ஆசுவாசப்படுத்தும் சிறுவன் காரை 2 முரை எட்டி உதைக்கிறார்.

அதற்குள் வண்டியை ஓட்டிவந்த நபர் கீழே இறங்கிவர அவரிடம் சிறுவன் ஆவேசமாக ஏதோ சொல்லிக் கொண்டே செல்கிறார். பின்னர் தாயிடம் வந்து அவரை பார்க்கிறார் அதற்குள் அங்கே சிறு கூட்டம் கூடி விடுகிறது.

காரை ஓட்டி வந்த நபர் அந்தப்பெண்ணை தனது காரின் பின்புறத்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். சில விநாடிகளே ஓடும் இந்த வீடியோவில் சிறுவனின் தாய்ப் பாசமும் அவரின் கோபமும் அனைவரையும் கவர்ந்து உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!