லிப்ட் கேட்ட சிறுமி.. தனியாக கூட்டி சென்று 2 இளைஞர்கள் செய்த கொடூரம்..!


ஹைதராபாத்தில் பாலியல் பலாத்கார குற்றவாளிகள் நான்கு பேரை போலீஸார் என்கவுன்ட்டரில் போட்டு தள்ளியும் கூட காம வெறியர்கள் திருந்துவதாக இல்லை. ஆந்திராவில் 16 வயது சிறுமியை சீரழித்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்தும் எரித்து கொன்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரையும் ஹைதராபாத் போலீஸார் அதிரடிாயக என்கவுன்டர் மூலம் கொலை செய்து விட்டனர்.

இந்த நிலையிலும் கூட வெறியர்கள் திருந்துவதாக இல்லை. கடந்த மாதம் 25ம் தேதி ஆந்திர மாநிலம் திருச்சானூரில் 16 வயது சிறுமியை 2 பேர் கொண்ட கும்பல் லிப்ட் தருவதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரு அயோக்கியர்களான வெங்கடேஷ், பக்கே ராஜமோகன் நாயக் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரும் திருப்பதியை சேர்ந்தவர்கள் ஆவர்.நவம்பர் 24ம் தேதியன்று நள்ளிரவுவாக்கில் அந்தப் பெண் திருச்சானூர் செல்வதற்காக மெயின் ரோட்டில் நின்றிருந்தார்.

அப்போது வெங்கடேஷ் பைக்கில் அந்தப் பக்கம் வந்துள்ளார். அவரை நிறுத்திய சிறுமி டிராப் செய்யுமாறு கேட்டுள்ளார். வெங்கடேஷும் அழைத்துச் சென்றார். ஆனால் சிறுமி சொன்ன இடத்திற்கு கூட்டிச் செல்லாமல், முல்லுபுடி என்ற கிராமத்திற்குக் கூட்டிப் போனார்.

அங்கு போனதும் பெட்ரோல் தீர்ந்து விட்டதாக கூறிய வெங்கடேஷ் தனது நண்பர் நாயக்கை போன் செய்து அழைத்துள்ளார். நாயக் வரவும், இருவரும் சேர்ந்து சிறுமியை கட்டாயப்படுத்தி தனியான இடத்திற்குத் தூக்கி சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

இரவு முழுவதும் தவித்த சிறுமி அடுத்த நாள் காலை கஷ்டப்பட்டு தனது வீடு சென்று சேர்ந்தார். பெற்றோரிடம் இதுகுறித்து கூறினார். இதையடுத்து திருச்சானூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்த நிலையில் தற்போது இரண்டு பேரும் சிக்கியுள்ளனர்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!