கைலாசாவா அது எங்க இருக்கு? சொன்னீங்கன்னா செட்டிலாயிடுவேன்.. நித்தி தடாலடி..!


இந்த கைலாசா நாடு கைலாசா நாடுனு சொல்றீங்களே அது எங்கே இருக்கிறது என சொல்லுங்கள். அங்கு சென்று செட்டிலாகிவிடுவேன் என நித்யானந்தா புது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் பாலியல் குற்றங்களால் திணறடிக்கும் நித்யானந்தா, தற்போது குழந்தை கடத்தல் விவகாரத்திலும் சம்பந்தப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இன்னொரு பக்கம் அவர் எங்கிருக்கிறார் என்பதில் மர்மம் நீடிக்கிறது.

தான் இருக்கும் இடத்தை கூறாமல் நித்யானந்தா புதிய புதிய வீடியோக்களை வெளியிட்டு போலீஸாரை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் அரசையும் விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில் கைது நடவடிக்கைக்கு பயந்து கொண்டு அமெரிக்காவின் ஈக்வடாரில் ஒரு தனித்தீவை நித்யானந்தா விலைக்கு வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கு கைலாசா என பெயரிட்டு தனி நாடாக அறிவிக்க ஐ.நா.விடம் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கைலாசா நாட்டிற்கு செல்ல தனி பாஸ்போர்ட், கொடியை அறிமுகப்படுத்திய நித்தி, அந்த நாட்டின் பிரதமர் தான்தான் என பிரகடனப்படுத்திக் கொண்டார். இதுபோல் தினமும் நித்யானந்தாவை பற்றி பல செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் நித்யானந்தா தற்போது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நான் வாங்கியதாக கூறப்படும் தீவு எங்கிருக்கிறது என தெரிவித்தால் அங்கு போய் நிம்மதியாக செட்டில் ஆகிவிடுவேன். மீம்ஸ் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்களால் மிகவும் பிரபலமாகிவிட்டது.

மீம்ஸ் கிரியேட்டர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்பது எனக்கு தெரியாது. அவர்கள் சொல்லும் கைலாசா நாடு எங்கிருக்கிறது என தெரிவித்தால் நான் அங்கு சென்றுவிடுவேன். இதற்கு மேல் நான் என்ன சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள். இந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் வாங்கின காசுக்கு மேல கூவுறாங்க என தெரிவித்திருந்தார்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!