ஆறு மாசத்துக்கு ஒருத்தி… கணவனின் லீலைகளை அம்பலப்படுத்திய ஜெயஸ்ரீ!


நடிகை ஜெய்ஸ்ரீ, தனது கணவர் நடிகை மகாலட்சுமி உடன் மட்டும் பழக்கம் இல்லை என்றும் இன்னும் வேறு சில நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

குடும்பத்தகராறு காரணமாக நடிகர் ஈஸ்வர் தனது மனைவியை அடி வயிற்றில் எட்டி உதைத்து இருக்கிறார். இதனால் வலி தாங்க முடியாமல் மயங்கி விழுந்திருக்கிறார் ஜெய்ஸ்ரீ. உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.

மருத்துவமனை சார்பாக வடபழனி காவல் நிலையத்தில் நடிகர் ஈஸ்வருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. வடபழனி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாருக்கும் தனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று நடிகை ஜெய்ஸ்ரீ தற்போது கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர், தனது கணவருக்கு மகாலட்சுமியுடன் மட்டும் பழக்கம் இல்லை அவருக்கு முன்னரே வேறு ஒரு சில நடிகையுடனும் ஏர் ஹோஸ்டஸ் ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்தார் என்று கூறியிருக்கிறார். அவர் ஆறு மாசத்துக்கு ஒரு கேர்ள் பிரண்ட் மாத்துவார்.

அதுமட்டுமில்லாமல் தனக்கும் வேறொரு ஆணுக்கும் தொடர்பு இருப்பதாக தவறான கருத்தைப் பரப்பி வருவதாகவும் தன் கணவர் மீது புகார் அளித்துள்ளார் நடிகை ஜெயஸ்ரீ.

இவை அனைத்தையும் கூட தன்னால் சகித்துக் கொள்ள முடிகிறது . ஆனால் பெற்ற மகள் மீது தவறாக கை வைத்ததை தான் தன்னால் சகித்துக் கொள்ள இயலவில்லை என்பதால் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்து இருப்பதாக நடிகை ஜெய்ஸ்ரீ கூறியது குறிப்பிடத்தக்கது.-Source: times

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!