மகாலட்சுமியுடன் கள்ளத்தொடர்பு… வீடியோ காலில் கொஞ்சுவார்கள் – ஜெயஸ்ரீ பரபர புகார்..!


சின்னதிரை நடிகை ஜெயஸ்ரீ தனது கணவரும் நடிகருமான ஈஸ்வர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் சின்னதிரை நடிகை மாகாலட்சுமியுடன் கணவருக்கு ஏற்பட்ட தகாத உறவால், தன்னிடம் விவாகரத்து கேட்டு கணவனும் மாமியாரும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகக் கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார். ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் அடிப்படையில் ஈஸ்வர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும் அவரது தாயாரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள நடிகை ஜெயஸ்ரீ, எங்களுக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தையும் உள்ளது. என் கணவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தேவதையை கண்டேன்’ சீரியலில் மகாலட்சுமியுடன் நடித்திருந்தார். மகாலட்சுமிக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.


ஆனால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் என்னிடம் விவகாரத்து பெற்றுக்கொண்டு மகாலட்சுமியை திருமணம் செய்ய ஈஸ்வர் ஆசைப்பட்டார். என்னிடம் இதற்காக விவாகரத்து கேட்டார். நான் கொடுக்க மறுத்துவிட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர் தினமும் என்னை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். என் மாமியாரும் இதற்கு உடந்தை’ என்றார்.


தொடர்ந்து பேசியுள்ள அவர், ‘ஒருகட்டத்தில் வீட்டில் என் கண்முன்னே மகாலட்சுமியிடம் வீடியோ கால் செய்து கொஞ்சி கொண்டிருப்பார். அவளின் குழந்தையிடம் என்னை அப்பா என்று கூப்பிடு என்று கூறுவார். இதனால் நானும் என் மகளும் மன உளைச்சலுக்கு ஆளானோம்.

குடித்துவிட்டு என்னை வயிற்றில் எட்டி உதைத்தார். அந்த வலி இன்னும் எனக்கு இருக்கிறது. மேலும், நடுவீட்டில் சிறுநீர் கழிப்பார். இந்த கொடுமையெல்லாம் பொறுக்கமுடியாமல் தான் புகார் கொடுத்தேன். இது தெரிந்து மகாலட்சுமி தலைமறைவாகி விட்டாள்’ என்று கூறியுள்ளார்.-Source: top.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!