தாய்க்கு மாப்பிள்ளை பார்த்து மறுமணம் செய்த மகள்.. நெகிழ வைக்கும் சம்பவம்!


நம் நாட்டில் தடைசெய்யப்பட்ட பல தலைப்புக்களில் மிக முக்கியமான ஒன்று காதல். நம் நாட்டில் பெரும்பாலான குழந்தைகள் தங்களுடைய பெற்றோர் முன் காதலை பற்றி பேசுவதற்கு தயங்கும் சூழ்நிலை இன்றும் நிலவி தான் வருகிறது.

ஆனால் இத்தகைய கோட்பாட்டையே ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்த 25 வயது மிக்க சன்ஹிதா அகர்வால் என்ற பெண் தகர்த்தெறிந்து தன் தந்தை இறந்தவுடன் தன் தாயாருக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைத்துள்ளார்.

சன்ஹிதா அகர்வால் தன் தந்தையான முகேஷ் குப்தாவை (வயது 52). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இழந்துவிட்டார். அவரது மரணத்திற்குப் பிறகு, சன்ஹிதாவின் தாயும் சகோதரியும் வாழ்க்கையை மிகவும் கடினப்பட்டு சமாளித்து வந்தனர்.

தன்னுடைய தந்தையின் இழப்பை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் இவ்வளவு சீக்கிரம் தங்களை விட்டு பிரிந்து விடுவார் என்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் சன்ஹிதா கூறினார்.

ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் முகேஷின் பிரிவை அவரது குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ள இயலாது சூழ்நிலை நிலவி வந்துள்ளது. சில சமயங்களில் சன்ஹிதாவின் தாயார் கீதா அகர்வால் வீட்டு வாசலில் உட்கார்ந்து தன் கணவரின் பிரிவை எண்ணி எண்ணி அழுது கொண்டே இருப்பாராம்.

அந்நிலையில் சன்ஹிதா வேலை நிமித்தமாக ஜெய்ப்பூரில் இருந்து வேறொரு ஊருக்கு சென்றுள்ளார் . அந்நேரத்தில் தனிமையில் வாடி வந்த தன் தாயாரை பார்ப்பதற்காக ஒவ்வொரு வாரமும் ஜெய்ப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விடுவாராம்.

அப்போது தான் சன்ஹிதாவிற்கு ஒரு யோசனை வந்துள்ளது. தன் தாயார் தனிமையில் இருப்பதால் தான் தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பதாகவும் அவரை விரைவில் இந்த தன்மையிலிருந்து விடுபட வைக்க வேண்டும் எனவும் யோசித்து உள்ளார்.

இதனையடுத்து மேட்ரிமோனியில் தனது தாயாருக்கு ப்ரொபைல் கிரியேட் செய்து வரனை தேடி உள்ளார். ஒரு வாழ்க்கைத் துணையை இழந்த வேதனையைப் புரிந்துகொள்ளக்கூடிய தன் தாயாருக்கு ஏற்ற கணவரை தேடி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் கிருஷ்ணா குப்தா( வயது 55) என்பவரை தேடி கண்டுபிடித்து உள்ளனர். அவருடைய மனைவி, கடந்த 2010ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து சன்ஹிதாவின் தாயார் கீதாவுக்கும் கிருஷ்ணாவுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விட்டது. பின்னர் ஆர்யா சமாஜின் சடங்குகளின்படி இருவரும் கடந்த டிசம்பர் 3, 2017 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சன்ஹிதாவின் தாயார் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவருக்கான சரியான வாழ்க்கை துணையை தான் தேடித் தந்து இருப்பதாகும் மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார் சன்ஹிதா.

ஒரு தாயாரின் தனிமையை போக்க மகள் செய்த இத்தகைய காரியம் காண்போரின் நெஞ்சங்களை நெகிழ வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.-Source: times

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!