இதற்குத் தானா… திருமணமான பெண்கள் வேறு ஆண்களை தேடுவது…!

இன்றைய காலக்கட்டத்தில் செய்தி தாள்களில் அதிமாக வரும் செய்தி என்றால் அது கள்ளக்காதல் விவகாரம்தான். திருமணம் ஆன பெண்களில் அனேகம்பேர் இந்த கள்ளக்காதல் விவகாரத்தில் மாட்டி கொள்கிறார்கள்.

இது எதனால் ஏற்படுகின்றது என்றால், பொதுவாகவே பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பு தனக்கு வரப்போகும் கணவன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று ஒரு கற்பனை கோட்டை கட்டி வைத்திருப்பாள்.

ஆனால் எல்லா பெண்களுக்கும் விரும்பிய மண வாழ்க்கை அமைவதில்லை. இதனால் நமக்கு கிடைத்த வாழ்க்கை இதுதான் என நினைத்து குடும்பம் நடத்தி கொண்டிருப்பார்கள்.

அப்போது அந்த பெண்ணுக்கு அவர் எதிர்பார்த்த மாதிரியே ஒரு ஆண் கிடைத்தால், அவர்களுடன் தங்களது உறவை தொடர்வார்கள். அவளது கணவன் செக்சில் முழு திருப்தியை கொடுத்தாலும் அது அந்த பெண்ணுக்கு மன நிறைவை தராது.

அதுவே கள்ளக்காதலன் செக்சில் திருப்தியை தராவிட்டாலும் அவன் மீதான ஈர்ப்பு, காதல் குறையாது. அவனையே மனம் நாடும். சிலருக்கு செக்சில் திருப்தியை தராவிட்டால், வேறு ஆண்களை நாடுவார்கள்.

மேலும் திருமணத்திற்கு முன்பு யாரையாவது காதலித்து இருப்பார்கள். ஆனால் பெற்றோர் எதிர்ப்பால் வேறு ஒருவருடன் திருமணம் நடந்திருக்கும். திருமணத்திற்கு பிறகு பழைய காதலனை பார்க்கும்போது அவனனோடு தனது கஷ்ட சுகங்களை பகிர்ந்து கொள்ள தோன்றும். உறவு கொள்ளவும் தோன்றும்.

அதுமட்டும் அல்லாது கணவனது சித்ரவதைகளை தாளமுடியாமல் வேறு ஆணுடன் தொடர்பை ஏற்படுத்தி கொள்பவர்களும் உண்டு. எனவே முடிந்தவரை கட்டிய மனைவியின் மனதறிந்து செயல்படுவது ஆண்களுக்கு நல்லது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!