ரணில் விக்கிரமசிங்க இன்று பதவி விலகல்? புதிய பிரதமராகிறார் மகிந்த ராஜபக்ச!


இலங்கையின் 8-ஆவது அதிபராக, முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலரும், முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் தம்பியுமான கோத்தபய ராஜபட்ச நவ.18-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டாா். இதையடுத்து மார்ச் 1, 2020 வரையிலான குறுகிய காலகட்டத்துக்கான 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை புதன்கிழமை பதவியேற்கவுள்ளது.

இதில் தங்களுக்கு ஆதரவு அளித்த கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அமைச்சரவைப் பதவி வழங்க அதிபர் கோத்தபய ராஜபட்ச முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், பிரதமா் ரணில் விக்ரமசிங்க, புதன்கிழமை பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் மாலை 4 மணியளவில் தனது ராஜிநாமா கடிதத்தை அதிபரிடம் வழங்க உள்ளதாக இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையடுத்து, தனது சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபட்சவை புதிய பிரதமராக கோத்தபய நியமிக்கலாம் என்று கூறப்படுகிறது.-Source: dinamani

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!