எடப்பாடி இப்படி நடக்கும் என நினைத்திருப்பாரா..? ரஜினியின் பரபரப்பு பேச்சு! வைரல் வீடியோ!


முதல்வர் ஆவேன் என இ.பி.எஸ்., கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்; அதிசயங்கள் நாளையும் நடக்கும் என கமல்ஹாசனுக்கு நடந்த பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமல், திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி கமல் 60 நிகழ்ச்சி நடந்தது.

இதில் திரைத்துறையினர் பலர் கலந்து கொண்டனர். அதில் தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல் சார்பில் 1கோடி ரூபாயை கமலும், ரஜினியும் இணைந்து வழங்கினர்.ரஜினி பேசியதாவது: முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.

பழனிசாமி ஆட்சி, 4 அல்லது 5 மாதங்களில் கவிழ்ந்து விடும் என 99 சதவீத மக்கள் கூறினார்கள். ஆனால் அற்புதம் நடந்தது. அனைத்து தடைகளையும் மீறி ஆட்சி தொடர்கிறது. அதுமாதிரியான அதிசயம், நேற்று நடந்தது; இன்று நடக்கிறது; நாளையும் நடக்கும்.கமலும், நானும் வெவ்வேறு இடத்துக்கு போனாலும், எங்களது சித்தாந்தம், கொள்கை மாறினாலும் நட்பு எப்போதும் போல் தொடரும். எங்கள் பெயரை வைத்து ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.-Source: dinamalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!