3 ஆண்டுகளில் ஒரு முறை கூட வீட்டுக்கு வரவில்லை.. மகளை நினைத்து கதறும் தந்தை!


திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண்ணை எரித்து சாம்பலாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜஸ்பால் சிங். விவசாயியான இவர், 3 ஆண்டுகளுக்கு முன் ஹர்மான் ப்ரீத் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சமையலறைக்குச் சென்ற ஹர்மான் ப்ரீத் மற்றும் அவரது மகள் தீ விபத்து ஏற்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று ஜஸ்பால் சிங் கூறிவந்த நிலையில், ஹர்மானின் தந்தை இதுபற்றி போலீசில் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

ஆம், கடந்த 3 ஆண்டுகளாகவே, தனது மகளை ஜஸ்பால் சிங் அடித்து கொடுமை செய்து வந்ததாகவும், திருமணம் முடிந்த பின் ஒருமுறை கூட பிறந்த வீட்டிற்கு தனது மகளை அவர் அனுப்பி வைக்கவில்லை எனவும் ஹர்மானின் தந்தை போலீசில் குறிப்பிட்டுள்ளார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரின் ட்யூப் கத்தியால் அறுக்கப்பட்டுள்ளதையும், அதன் அருகே மண்ணெண்ணெய் கேன் ஒன்று உருகிய நிலையில் கிடந்ததையும் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, ஜஸ்பால் சிங் மற்றும் அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர். என்ன காரணத்தால் அவர்கள் இந்த கொலையை செய்தனர் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.-Source: Times

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!