கமலை ஜனாதிபதியாக பார்க்க ஆசைப்படுகிறேன் – நடிகர் பிரபு..!


கமலை ஜனாதிபதியாக பார்க்க ஆசைப்படுவதாக பரமக்குடியில் நடந்த கமலின் தந்தை சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகர் பிரபு கூறினார்.

கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் பிரபு பேசியதாவது:-

நடிப்புலகில் கமல் திறமை பெற்றவர். அவரை அன்பால் எளிதில் வென்று விடலாம். 5 வயது முதல் நடிக்க தொடங்கி இன்று 60 வயதாகி விட்டதாக சொல்கிறார்கள். பார்த்தால் அப்படியா தெரிகிறது?. அவர் என்றும் மாஸ்டர் கமல்ஹாசன்.

அப்பாவுக்கு (சிவாஜி) கமல் மீது அளவு கடந்த பிரியம் உண்டு. எனது திரையுலக வாரிசு கமல்தான் என்று கூறி உள்ளார்.

தொழில்நுட்ப விஷயங்கள் அனைத்தையும் கற்றுக்கொண்டு என்னைவிட அதிக திறமையுடன் கமல் விளங்கி வருவதாக அப்பா கூறினார்.

எங்கள் குடும்பம் மிகவும் பெரியது. அதுபோல் கமல் குடும்பமும் பெரியது. அண்ணனை தற்போது குடும்பத்துடன் பார்ப்பது மிகுந்த சந்தோசமாக உள்ளது.

அவர் மனதுக்குள் என்ன நினைப்பார் என்பது எனக்கு தெரியும். கமல் மென்மையானவர். நீங்கள் (ரசிகர்கள்) அன்பு காட்டுவதுபோல் நானும் அன்பு காட்டுகிறேன். கமலை ஜனாதிபதியாக பார்க்க ஆசைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!