பட்டப்பகலில் அண்ணி என்றும் பாராமல் கொழுந்தன் செய்த பயங்கரம்..!


வீட்டுமனை தகராறினால் அண்ணியை கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது விருத்தாச்சலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலம் என்னும் இடம் அமைந்துள்ளது.

இதற்கு உட்பட்ட மங்கலம்பேட்டைக்கு அருகில் அமைந்துள்ள எடச்சித்தூர் கிராமத்தில் குழந்தைவேல் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய வயது 32. இவருடைய மனைவியின் பெயர் சிவா. சிவாவின் வயது 30. இத்தம்பதியினருக்கு ஹரிஹரன் என்ற 11 வயது மகனும், ஆகாஷ் என்ற 9 வயது மகனும் உள்ளனர். குழந்தைவேலின் தம்பியின் பெயர் ஆறுமுகம். ஆறுமுகம் தொழிலாளியாக அந்த ஊரில் பணியாற்றி வந்தார். தன்னுடைய தாயுடன் தனியாக ஆறுமுகம் வசித்து வந்தார்.

ஆறுமுகத்தின் வீடு முன்புறமும், குழந்தைவேலின் வீடு பின்புறத்திலும் அமைந்திருந்தது. இதனால் அடிக்கடி ஆறுமுகத்திற்கும், குழந்தைவேலின் மனைவியான சிவாவுக்கும் தகராறுகள் ஏற்பட்டுள்ளன. அப்போதெல்லாம் குழந்தைவேலு இருவரையும் விலக்கி சமாதானம் செய்து வைப்பார்.

இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் வழக்கம்போல இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறை குழந்தைவேலு தகர்த்தார். மேலும் தன் மனைவியுடன் கூலி வேலைக்காக சென்றுவிட்டார். ஆனாலும் ஆறுமுகத்தின் ஆத்திரமும் குறையாமலே இருந்தது.

மதியம் சாப்பாட்டிற்கு சிவா மட்டுமே வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் முன்பகுதியில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றபோது அவருக்கும் ஆறுமுகத்திற்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடும் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் அண்ணி என்றும் பாராமல் கையில் கிடைத்த இரும்பு கம்பியால் அவரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

உடனடியாக சிவா மயங்கி விட்டார். சிவா இறந்துவிட்டார் என்று நினைத்துக்கொண்ட ஆறுமுகம், தான் கையில் கிடைத்தால் உறவினர்கள் சும்மா விடமாட்டார்கள் என்ற அச்சத்தில் பக்கத்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்தனர். சிவா மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் தற்கொலை செய்துகொண்ட ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: times

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!