உள்ள வந்த மூணு பேர்ல பழிவாங்க காத்திருக்கும் சாக்சி: கவின் நிலைமை என்ன?

பிக் பாஸ் வீட்டில் வனிதா என்ற ஒரு வைல்ட் கார்டு எண்ட்ரியையே சக போட்டியாளர்களால் சமாளிக்க முடியாத நிலையில் தற்போது சாக்ஸி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகிய மூன்று சிறப்பு விருந்தினர்கள் புதிதாக வந்துள்ளனர். அபிராமி மற்றும் மோகன் வைத்யா குறித்து மற்ற போட்டியாளர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால் சாக்சியின் வருகை கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கனவே கவின் கூறிய கருத்துகளுக்கு வெளியில் பதிலடி கொடுத்துள்ள சாக்ஸி அதே கேள்விகளை கவினிடம் நேரடியாக கேட்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சாக்ஸி உள்ளே வந்தவுடன் வத்திக்குச்சி வனிதா அவரை ஏற்றி விட்டுள்ளதால் எந்த நேரத்திலும் சாக்ஸி பொங்கி எழ வாய்ப்பு இருக்கிறது. பழி வாங்க காத்திருக்கும் சாக்சியைடம் கவின் சிக்குவாரா? கவின் நிலைமை என்ன என்பது போகப்போகத்தான் தெரியவரும்.

இந்த நிலையில் வெளியில் போனவர்களில் நீ மட்டும்தான் அப்படியே இருக்கின்றாய் என்று அபிராமியிடம் சாண்டி கூறுகிறார். அபிராமியும், மோகன் வைத்யாவும் கவின் குழுவினர்களுடன் சகஜமாக பேசி வரும் நிலையில் சாக்சி இப்போது வரை ஒரு முறைப்பு பார்வையை மட்டுமே பார்த்து வருகிறார். சாக்சியை பிக்பாஸ் உள்ளே அனுப்பியதன் நோக்கம் விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. – Source: indiaglitz

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.