பிக் பாஸ் வீட்டு அனுபவம் குறித்து கண்கலங்கிய சித்தப்பு… பிளீஸ் அது மட்டும் கேக்காதீங்க !


பிக் பாஸ் வீட்டில் தனது முதல் நாள் பயணத்தை துவங்கிய சரவணன் ஆரம்பத்தில் சற்று முசுடாக தெரிந்தாலும் கூட போகுற போக்கில் அவருக்கே உரிதான பாணியில், நேர்மையாக தான் செய்த தவறை ஒத்துக்கொள்ளும் மற்றும் அதற்காக எந்த எல்லைக்கும் போய் மன்னிப்பு கேட்பது என எதார்த்தமாக பழகி, மக்கள் மனதில் அதீத அன்பை பெற்றவர் சரவணன்.

அவர் வீட்டின் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் தனக்குரிய பாணியில் அவரது எக்ஸ்பிரஸ்ன்கள் மூலமாக தனது கருத்தை சொல்லாக்கூடியவர், இந்த நிலையில் தான் கல்லூரி காலத்தில் செய்த தவறை எதேச்சியாக சொல்ல, அதற்க்கு எதிர்விணையாற்றபட்டதை அடுத்து அவர் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார்.

தொடர்ந்து சாண்டியுடன் அதிக நெருக்கம் காட்டி வந்த சரவணன், சாண்டியின் வீட்டிற்க்கு சென்று அவரது மனைவி மற்றும் குழந்தையை பார்த்து புகைபடங்களை வெளியிட்டார். மேலும் அவர் அதனை தொடர்ந்து அத்திவரதரை பார்க்க சென்ற போது, அவருக்கு மக்கள் மத்தியில் கிடைத்த அன்பும் வரவேற்பும் அவரை கலங்கடித்துள்ளது.

மேலும் பிக் பாஸ் வீட்டிற்க்குள் தான் நேர்மையாக இருந்தது வெளிப்பாடாக தான் இந்த அன்பு என உடைந்த குரலில் பேசியவர். தனது அம்மா தான் எனக்கு எல்லாம் எனவும் அவருக்காக கோவில் கட்டி வருவதாகவும் விரைவில் அதனை பிரதிஸ்டை செய்ய உள்ளதாகவும் சொன்னவர், மேலும் அதை பற்றி கேட்க வேண்டாம் பிளீஸ் என கண் கலங்கியுள்ளார்.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!