கல்யாணமா..? டேட்டிங் மட்டும் தான்… எனக்கு போரடித்து விடும் – ஸ்ரீரெட்டி சர்ச்சை கருத்து..!


பாலியல் புகாரில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை விளாசி தள்ளி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. ஐதராபாத்தில் ஆடை அவிழ்ப்பு போராட்டம் நடத்தியும் அதிர வைத்தார். தற்போது சென்னையில் குடியேறி இருக்கிறார். ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகிறது.

இதில் படுக்கைக்கு அழைத்தவர்களை காட்சிப்படுத்துகின்றனர். இதனால் மிரட்டல்கள் வருவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தனது திருமணம் குறித்து சர்ச்சை கருத்தை தற்போது பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“எனது பெற்றோர் மீது மட்டுமே என்னால் அன்பு செலுத்த முடியும். வேறு யாரிடமும் அன்பு காட்ட முடியாது. எனக்கு ஒருவரை பிடித்து இருந்தால் அவருடன் ஒரு வருடம் சேர்ந்து ‘டேட்’ செய்வேன். அதன்பிறகு அவர் மீது எனக்கு போராடித்து விடும். அதனால்தான் எனக்கு திருமணம் செய்து கொள்வது பிடிக்கவில்லை.

எனக்கு ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக காதல் வேண்டும். டிராமா இல்லை. குழப்பம் இல்லை. உண்மையான பெண்” என்று கூறியுள்ளார்.

ஸ்ரீரெட்டியின் கருத்து சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிலர் அதனை வரவேற்றும் இன்னும் சிலர் கண்டித்தும் பேசி வருகிறார்கள்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!