அந்த நடிகை ரெண்டாம் தாரமாக வர ஆசை… பிரபல நடிகரின் மகள் ஓபன் டாக்..!


இந்திசினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சயப் அலிகான். இவர் அம்ருதா எனும் நடிகையைதிருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாரா அலி கான் எனும் மகளும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சயப் அலிகான் அம்ருதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றார்.

இதனை அடுத்து இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான கரீனா கபூரை சயப் அலி கான் காதலிப்பதாக தகவல் வெளியானது. இதனை நிரூபிக்கும் வகையில் சயப் அலி கானும் – கரினா கபூரும் ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்தனர். பின்னர் ஒரு கட்டத்தில் தங்கள் காதலை வெளிப்படுத்தி திருமணமும் செய்து கொண்டனர்.

சயப் அலிகானுக்கு தனது இரண்டாவது மனைவி கரீனா கபூர் மூலமாக தைமூர் அலி கான் என்கிற மகன் இருக்கிறார். இந்த நிலையில் சயப் அலிகானின் முதல் மனைவி அம்ருதாவிற்கு பிறந்த சாரா அலி கான் திரையுலகில் அறிமுகம் ஆகியுள்ளார். முதல்படமான கேதார் நாத், இரண்டாம் படமான சிம்பா என இரண்டு வெற்றிப் படங்களை சாரா கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அடுத்த படத்திற்கான வாப்புகள் சாராவிற்கு வரிசை கட்டி நிற்கின்றன. இதனால் அடுத்தடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சாரா அசத்தி வருகிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாராவிடம் அவரது தந்தையின் இரண்டாவது மனைவி கரீனா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்கு பதில் அளித்த சாரா அலிகான், தனது தந்தை சயப் அலி கான் கரீனா கபூரை காதலிப்பதாக தகவல் வெளியான போது முதலில் தனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அனால் நான் கரீனாவின் மிகத் தீவிரமான ரசிகை. அதுவும் கரீனாவின் நடனம் மற்றும் நடிப்பிற்கு நான் அடிமை. இதனால் என் வீட்டிற்கு கரீனா வரப்போகிறார் என்று எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தது.

சொல்லப்போனால் நான் கரீனா கபூர் எனது தந்தையை திருமணம் செய்து கொள்ள உள்ளதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவே என்னுடைய தோழிகள் மற்றும் என்னை பற்றி நன்கு அறிந்த பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர். எனக்கும் கூட கரீனா கபூர் எங்கள் குடும்பத்தில் ஒருவரானது மகிழ்ச்சி தான். இவ்வாறு சாரா கூறினார்.

என்னதான் தனக்கு பிடித்த நடிகையாக இருந்தாலும் தன்னுடைய அப்பாவுக்கு ரெண்டாம் தாரமாக வர விரும்பியதாக சாரா கூறியிருப்பது ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!