அஜித்துடன் கை கோர்க்கும் ரங்கராஜ் பாண்டே – இரகசியம் அம்பலம்..!


அமிதாபச்சன் நடித்த பிங்க் ரீமேக்கான நடிகர் அஜித்தின் ‘தல-59’ என்ற பெயரிடப்படாத புதிய படத்தில், பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே நடிக்க உள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.

சிவா இயக்கத்தில் அஜித் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து சிறுத்தை சிவா படத்திலேயே நடித்து வந்த அஜித் தனது அடுத்த படத்தில் பிரபல இயக்குனர் ஒருவருடன் கைக்கோர்த்துள்ளார்.

பிங்க் ரீமேக் தல-59

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களின் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே இணையத்தில் வெளியாகின. இந்நிலையில் இத்தகவலை உறுதியாக்கும் விதமாக நேற்று சென்னையில் அஜித்தின் ‘தல-59’ படத்திற்கான பூஜை நடைபெற்றது. பூஜையில் கடவுள் படங்களுடன் சேர்த்து மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படத்துக்கும் மாலை அணிவித்து பூஜை செய்யப்பட்டது.

இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இறுதி செய்யப்பட்ட பின் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பின் அஜித்துடன் யுவன்ஷங்கர் ராஜா இணைந்துள்ளார். நீராவ் ஷா ஓளிப்பதிவு செய்கிறார்.

அஜித்துடன் இணையும் ரங்கராஜ் பாண்டே

பிரபல பத்திரிகையாளரும், தந்தி டிவியின் முன்னாள் தலைமை செய்தி ஆசிரியருமான ரங்கராஜ் பாண்டே தல-59 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஏறக்குறைய உறுதி செய்யும் விதமாக, பாண்டே தல-59 படத்தின் பூஜையில் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


பாண்டே திரையுலகில் காலடி எடுத்து வைக்க காரணம் என்ன

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தினசரி ஒரே வேலையைச் செய்வதால் ஏற்பட்ட அயர்ச்சியின் காரணமாக பத்திரிகையாளர் பணியில் இருந்து விலகியதாக அவர் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்த திடீர் ராஜினாமா குறித்து ஏகப்பட்ட வதந்திகள் பரவியது.

அதிலும் குறிப்பாக ரங்கராஜ் பாண்டே பாஜகவில் சேரப்போகிறார், ரஜினியின் கட்சியில் இணையப்போகிறார் என்றெல்லாம் தகவல்கள் உலா வந்தன. ஆனால் ரங்கராஜ் பாண்டே அவற்றையெல்லாம் முற்றிலும் மறுத்து வந்தார்.

உடனடியாக எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுவரைக்கும் பண்ணாத ஒன்றைப் புதிதாக பண்ண வேண்டும் என யோசித்து வருகிறேன். உங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நான் முடிவுகள் எடுப்பேன் என அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருந்தார். அதன்படி, பிங்க் ரீமேக்கான அஜித்தின் தல-59 இல் நடிக்க இருக்கிறாராம்.

பிங்க் இந்தி படத்தில் அமிதாப்பச்சனை எதிர்த்து வாதடும் வழக்குரைஞர் கதாபாத்திரத்திலோ அல்லது நீதிபதி கதாபாத்திரத்திலோ அவர் நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.-source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!