‘யாரையும் பிடித்து வைக்க முடியாது..’ செந்தில் பாலாஜிக்கு வாழ்த்துக் கூறிய டிடிவி தினகரன்..!!


அமமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த நிலையில், டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- எங்களுடன் நன்றாகத்தான் இருந்தார் செந்தில் பாலாஜி, 2006 ஆம் ஆண்டில் இருந்து செந்தில் பாலாஜியை நன்கு தெரியும். 4 மாதங்களுக்கு முன் சொந்த பிரச்சினைகள் இருப்பதாக கூறி சென்றார்.

கஜா புயல் நேரத்தில் நிவாரணப்பொருட்களையும் செந்தில் பாலாஜி அனுப்பி வைத்தார். செந்தில் பாலாஜி நல்ல தம்பிதான், யாரையும் இழுத்து வைக்க முடியாது. சொந்தப்பிரச்சினைகளால் ஒதுங்கி இருப்பதாக கூறியவர் திமுகவில் இணைந்து விட்டார். செந்தில் பாலாஜி சென்றதில் வருத்தம் இல்லை” எங்கிருந்தாலும் வாழ்க.

யாரையும் பிடித்து வைக்க முடியாது. எந்த கட்சியில் இருக்க வேண்டும் என்பது அவரவர் சொந்த விருப்பம். அமமுக கூடாரம் காலியாகவில்லை. செந்தில் பாலாஜி திமுகவிற்கு சென்றதில் வருத்தம் இல்லை. எங்கள் கட்சி நிர்வாகிகளை இழுத்து பலத்தை காட்ட வேண்டிய நிலையில் திமுக உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!