பிரதமர் மகிந்த பதவி விலகுவதாக முடிவு – குழப்பத்தில் மைத்திரி..!!


ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்த மஹிந்த ராஜபக்சே, நீண்ட நேரம் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி செயலகத் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இலங்கையில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பிரதமர் ராஜபக்சே தனது பதவியை நாளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இலங்கையில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் ராஜபக்சே பதவி விலகுகிறார்.

இலங்கையில் அதிபர் சிறிசேனாவால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். நாளை ராஜினாமா செய்கிறார் என அவரது மகன் நமல் ராஜபக்சே டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.source-dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!