மைத்திரியுடன் இணைந்து நல்ல கூட்டணியை மகிந்த உருவாக்குவார் – நாமல்


பிரதமர் பதவியிலிருந்து நாளை ராஜபக்சே விலகுவார் என அவரது மகன் நமல் ராஜபக்சே அறிவித்துள்ளார். நாட்டின் நிலைத்தன்மையை காப்பாற்ற பதவி விலகல் முடிவை ராஜபக்சே எடுத்துள்ளதாக நமல் ராஜபக்சே விளக்கம் அளித்துள்ளார்.

பதவி விலகல் ஏன் என்பது குறித்து நாளை பொதுமக்களுக்கு ராஜபக்சே விளக்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் நலன் கருதி அதிபர் சிறிசேனாவுடன் இணைந்து நல்ல கூட்டணியை ராஜபக்சே உருவாக்குவார் என்றும் நமல் ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.source-dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!