வரப்போகிறது 2019 புத்தாண்டு.. இந்த 3 ராசிக்காரர்களுக்கும் அடித்தது யோகம்..!


ஒவ்வொரு ராசியினருக்கும் அவர்களது கிரக நிலையை பொருத்து, பிறக்கப்போகும் புத்தாண்டு எப்படி அமையும் என்பதை கூற முடியும். அதன்படி, கன்னி, விருச்சகம், தனுசு ஆகிய மூன்று ராசியினருக்கு வரும் புத்தாண்டு மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டாக அமையும் என கூறப்படுகிறது.


முதலில் கன்னி ராசியை பற்றி பார்க்கலாம்.

இந்த ராசியினருக்கு புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரியில் மட்டுமே மிகவும் நார்மலாக இருக்கும். எப்போதும் உள்ளது போலவே நாட்கள் செல்லும். ஆனால் அதன் பின்னர் வரும் மாதமான பிப்ரவரி முதல் ஆண்டு முழுக்க அதிர்ஷ்ட மழை கொட்டும் என்கிறது ராசிப்பலன்.

எப்போதும் இலட்சியத்தை நோக்கி பயணிக்கும் உங்களது வலிமையான முயற்சி, உறுதியான நம்பிக்கையோடு பயணிக்கும் உங்களுக்கு கண்டிப்பாக இந்த ஆண்டு மிக அருமையாக அமையும்
ஆக மொத்தத்தில், கடின உழைப்பால் உங்கள் வேலையிலும் சரி, காதல் வாழ்க்கையிலும் சரி வெற்றி தான் வரும் புத்தாண்டு.


விருச்சகம்

விருச்சக ராசியினரே, உங்களுக்கு இந்த ஆண்டு ஒரு மாயாஜால ஆண்டாக அமைய உள்ளது. வரும் புத்தாண்டில் நீங்கள் என்ன ஆக வேண்டும் என நினைத்து உழைப்பை போடுகிறீர்களோ. கண்டிப்பாக அதற்கான பலன் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு என்ன வேண்டும் என நினைக்கிறீர்களோ அதனை கட்டாயம் வாங்கியே தீர்வீர்கள்


தனுசு

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மனைவி வழியில் கொஞ்சம் தகராறு இருந்து வந்த நிலையில் வரும் ஆண்டு பெரிய மாற்றத்தை உங்களுக்கு கொடுக்கும். இப்போது நடப்பது எல்லாம் நன்மைக்கே என எடுத்துக்கொண்டு சென்றால் வரும் ஆண்டு மிகவும் சிறப்பாக அமையும். இதுவரை தாங்கள் சந்தித்து வந்த பல பிரச்சனைகளுக்கு வரும் ஆண்டு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்.-source: manithan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!