திருநீற்றை எடுத்து நெற்றியில் மூன்று பட்டை போடுவதற்கு என்ன காரணம்..?


நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும்.

சிவனை வழிபடும் பலரும், இறைவனை வணங்கிய பிறகு ஆலயத்தில் தரப்படும் திருநீற்றை எடுத்து மூன்று விரல்களைக் கொண்ட பட்டையாக தீட்டிக்கொள்வார்கள். நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும். இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு ரிக்வேதம், நடுவிரல் யஜூர் வேதம், மோதிர விரல் சாமவேதம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது.

மூன்று பட்டைகள் இடுவது வேதங்களை மட்டுமின்றி வேறு சிலவற்றையும் குறிப்பதாக உள்ளது. அவற்றுள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

பிரம்மா, விஷ்ணு, சிவன்,

சிவன், சக்தி, ஸ்கந்தர்


அறம், பொருள், இன்பம்

குரு, லிங்கம், சங்கமம்

படைத்தல், காத்தல், அழித்தல். – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!