முதலிரவின் போது மாப்பிள்ளை கைது… அதிர்ச்சியில் பெண் வீட்டார்…!


ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காதரநெல்லூர் பகுதியை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருக்கும், வி.கோட்டாவில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 1–ந் தேதி திருமணம் நடந்தது.

இரவு பெண் வீட்டில் முதலிரவு நடந்தது. முதலிரவின்போது புதுமாப்பிள்ளை ராஜேஷ், தாலி கட்டிய மனைவியை வாயில் துணியை வைத்து அடைத்து அவரின் உடல் பாகங்களை பிளேடால் அறுத்து சித்ரவதை செய்துள்ளார்.

மேலும் அடித்தும் துன்புறுத்தி இருக்கிறார். ரத்தவெள்ளத்தில் துடித்த புதுப்பெண் அறையில் இருந்து வெளியே வந்து மயங்கி விழுந்தார். உடனே அவரை சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது பெற்றோரிடம் அவர் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண் வீட்டார் ராஜேசை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து கங்காதரநெல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் புதுப்பெண்ணை மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. – Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!