எந்த கடவுளை எப்பொழுது வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா..?

சூரியோதயத்திற்கு முன் தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். அதிகாலைப்பொழுது கடவுளைத்தியானம் செய்ய ஏற்றவேளை. இவ்வேளையில் விபூதி தரித்துக்கொண்டு கடவுளை சிந்திப்பது மிகவும் நல்லது.

விக்னங்கள், இடையூறுகள் நீங்க – விநாயகர்
செல்வம் சேர – ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
நோய் தீர – ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
வீடும், நிலமும் பெற – ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
ஆயுள், ஆரோக்கியம் பெற – ருத்திரன்


மனவலிமை, உடல் வலிமை பெற – ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
கல்வியில் சிறந்து விளங்க – ஸ்ரீ சரஸ்வதி
திருமணம் நடைபெற – ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
மாங்கல்யம் நிலைக்க – மங்கள கௌரி


புத்திர பாக்கியம் பெற – சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
தொழில் சிறந்து லாபம் பெற – திருப்பதி வெங்கிடாசலபதி
புதிய தொழில் துவங்க – ஸ்ரீகஜலட்சுமி
விவசாயம் தழைக்க – ஸ்ரீ தான்யலட்சுமி
உணவுக் கஷ்டம் நீங்க – ஸ்ரீ அன்னபூரணி


வழக்குகளில் வெற்றி பெற விநாயகர்,
சனி தோஷம் நீங்க ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
பகைவர் தொல்லை நீங்க திருச்செந்தூர் முருகன்
பில்லி, சூன்யம், செய்வினை அகல ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற சிவஸ்துதி

Source: panncom

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!