எவனாவது கிழிச்சி பாருங்க ஒரு அதிமுககாரங்க கூட உயிரோடு இருக்க மாட்டீங்க – அதிர்ச்சி வீடியோ..!

வாயை திறந்தாலே.. சும்மா கூவம் கொப்பளிக்கிறது இந்த இளைஞர்களின் வார்த்தைகளில்!!

சர்க்கார் விவகாரம் தமிழக அரசியல் களத்தையே அசைத்து பார்த்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் வசனங்கள் கட் செய்ய போய், விஜய் ரசிகர்கள் கொந்தளித்து போய் உள்ளனர்.

இதனால் தங்களது ஆதங்கத்தையும், கோபத்தையும், கொட்டி வருகின்றனர். இப்படித்தான் 2 ரசிகர்கள் ஃபேஸ்புக்கில் பதிவில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். “நாங்கள்லாம் தரை லோக்கல் ஆளுங்க”ன்னு சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இவர்கள் பார்க்கவே அந்த வீடியோவில் அப்படித்தான் நின்று கொண்டிருந்தார்கள்.

2 பேருமே இளைஞர்கள்தான்… 2 பேரும் லுங்கி கட்டிக் கொண்டு கையில் ஆளுக்கொரு வீச்சரிவாளை பிடித்தபடி நின்றிருக்கிறார்கள். அதில் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், பேனர்களை கிழித்தவர்கள் என ஒருத்தரை விடவில்லை.

எல்லாரையுமே நாக்கை பிடுங்கிற மாதிரி, அசிங்க அசிங்கமா, கேவல கேலவமா, காதை மூடிக் கொள்கிற அளவுக்கு பேசிவிட்டார்கள். அவர்கள் 2 பேரும் திட்டியதிலிருந்து அதுவும் நடுவுல.. நடுவுல.. மானே.. பொன்மானே மாதிரி வந்த கெட்ட வார்த்தைகளை எடிட் செய்து மீதமுள்ள வரிகள்தான் இவை:

ஒரு படம் வந்ததுக்கே இப்படி அள்ளு கிளம்புதே.. உண்மையிலேயே அவர் அரசியலுக்கு வந்தா என்ன செய்வீங்க… அப்படி என்ன அவர் தப்பா கேட்டுட்டார்.. நியாயத்தைதானே கேட்டார். நீங்க யாராவது ஒரு நல்லது பண்ணியிருக்கங்களா? பண்ணதெல்லாம் தப்பு… தப்பையே பண்ணிட்டு இருந்தீங்கன்னா அதைதானே படமா எடுக்க முடியும்? மொத்த விஜய் ரசிகர்களும் சேர்ந்தோம்ன்னா ஒரு அதிமுககாரனுகூட உயிரோடு இருக்க மாட்டீங்க…

மரியாதையா போனா போகட்டும்னு உயிரோடு வெச்சிருக்கிறோம்…இல்லன்னா நேரா வந்து அறுத்து போய்ட்டு போயிடுவோம்.. ஆனா தளபதி ரசிகர்மன்ற ஆளுங்க இப்படி பண்ணிட்டாங்களேன்னு எங்க தளபதிக்கு பேர் கெட்டு போயிடும்-னு பாக்கறோம்.. அதனால அடங்கி இருக்கிறோம்.. உங்க உசிரெல்லாம் எங்க தளபதிகிட்ட இருக்குது. நாளைக்கு காசி தியேட்டராண்ட வரேன்… திரும்பவும் பேனரை வெப்போம்.. எவனாவது கிழிச்சி பாருங்க… வாங்கடா காசி தியேட்டராண்ட… எங்க அருவாதான் பேசும்.-source : oneindia

இப்படியே திட்டி முடிச்சிட்டு அரிவாளை கொண்டு மிரட்டிவிட்டு 2 பேரும் காசி தியேட்டர் பக்கம் சென்றிருக்கிறார்கள். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.