கைரேகையை வைத்து எத்தனை குழந்தைகள் என கண்டுபிடிக்கலாம் என தெரியுமா..?


கைரேகை ஜோசியம் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம், ஒருவரின் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கணித்து கூறுவார்கள்.
இதனை வைத்து ஒருவருக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதையும் அறிந்து கொள்ளலாமாம்.

இரட்டைக் குழந்தைகள்
நமது கைகளில் உள்ள திருமண ரேகையின் மீது இருக்கும் கோடுகளின் முனைகளில் பிளவு ஏற்பட்டிருந்தால், அது அவர்களுக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும் என்பதைக் குறிக்கிறது.


ஆண் குழந்தை
நமது கையில் உள்ள குழந்தை ரேகை ஆழமாக மற்றும் பரவலாக இருந்தால், அவர்களுக்கு, ஆண் குழந்தை பிறக்கும் என்பதை குறிக்கிறது.

பெண் குழந்தை
நமது கைகளில், குழந்தையின் ரேகை, குறுகிய மற்றும் ஆழமற்று இருந்தால், அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் என்பதைக் குறிக்கிறது.


பலவீனமான குழந்தை
நமது கையில், உள்ள திருமண ரேகையில் இருந்து ஆரம்பிக்கும் போது, பிளவுடன் இருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை பலவீனமாக இருப்பதையும், பிறக்கும் குழந்தை அடிக்கடி நோய்கள் ஏற்படும் என்பதையும் குறிக்கிறது.

வளர்ப்பதில் கடினம்
நமது கையில் உள்ள குழந்தை ரேகையானது, முனை கம்பி போன்று வளைந்து ஒரு தீவு போல காட்சியளித்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தையை வளர்ப்பதில் மிகுந்த கஷ்ட நிலைகள் ஏற்படும் என்பதை குறிக்கிறது.


பிரச்சனையுள்ள குழந்தை
நமது கைகளில் குழந்தை ரேகையானது, வளைந்து நெளிந்து இருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தையானது, உடலில் பிரச்சனையுடன் பிறக்கும் என்பதைக் குறிக்கிறது.

ஆண்களின் குழந்தை ரேகை
ஆண்களின் கைகளில் குழந்தை ரேகை இருந்தால், அது குழந்தையின் ஆரோக்கியத்தைக் குறிக்கும். ஆனால் அந்த ரேகை தெளிவற்று அல்லது மற்ற ரேகையுடன் கலந்து இருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை அடிக்கடி நோயினால் பாதிப்படையும் என்பதைக் குறிக்கிறது.


பெண்களின் குழந்தை ரேகை
பொதுவாக பெண்களின் கைகளில் இருக்கும் குழந்தை ரேகையானது, அவர்களின் ரேகை கோடுகளின் எண்ணிக்கையை பொருத்து குழந்தைகள் பிறக்கும் என்பதைக் குறிக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!