ஆசையாக முத்தம் கொடுக்க சென்ற கணவருக்கு மனைவி கொடுத்த பேரதிர்ச்சி…!


டெல்லியில் பெண் ஒருவர் கணவன் தனக்கு ஒழுங்காக முத்தம் கொடுக்காத ஆத்திரத்தில் அவரின் நாக்கை கடித்து துப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரானோபாலா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவிக்கு ஆசையாக முத்தம் கொடுக்க சென்றுள்ளார். அவருக்கு ஒரு ஆப்பு ரெடியாக காத்துக் கொண்டிருந்தது.

கணவர் நன்றாக முத்தம் கொடுத்ததால் கடுப்பான அவரது மனைவி, கணவரின் நாக்கை கடித்து துப்பியுள்ளார். இந்த சர்ப்ரைஸை எதிர்பாராத அந்த நபர் கரோமுரோவென கத்தினார். அந்த நபரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்தப் பிரச்சனையில் மனைவி கணவனின் நாக்கை கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: tamil.webdunia

* இந்த பதிஉங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!