கலங்க வைக்கும் துன்பத்திலிருந்து காப்பாற்ற தினமும் ஆஞ்சநேயாவை இப்படி வழிபடுங்க..!


அனுமனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி அனுமனை வழிபாடு செய்து வந்தால் எந்த விதமான ஆபத்துகளும் நம்மை நெருங்காது.

ஆபத்துகளிலிருந்து காக்கும் அனுமன் ஸ்லோகம்
ஆபன்னா கிலலோகார்த்திஹாரிணே ஸ்ரீ ஹனூமதே
அகஸ்மாதாகதோத்பாத நாஸனாய நமோஸ்துதே
ஸீதாவியுக்த ஸ்ரீராம ஸோக து:கபயாபஹ

தபாத்ரிதயஸம்ஹாரின்னாஞ்ஜனேய நமோஸ்துதே!

– ஆபதுத்தாரண ஹனுமத் ஸ்தோத்திரம்.

பொதுப்பொருள்: அனைவரையும் எல்லாவிதமான ஆபத்திலிருந்து காப்பவரே ஆஞ்சநேயா, நமஸ்காரம். மனக்கவலையைப் போக்குகிறவரே, சற்றும் எதிர்பாராதவகையில் வரும் ஆபத்துகளைப் போக்குபவரே, ஆஞ்சநேயா நமஸ்காரம். சீதையை விட்டுப் பிரிந்த ராமபிரானின் சோகம், துக்கம், பயம் எல்லாவற்றையும் போக்கியவரும், எல்லாவகை மனவருத்தங்களையும் காணாமல் போகச் செய்பவருமான ஆஞ்சநேயரே நமஸ்காரம்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!