தினமும் மது குடிப்பவரா…? இத படித்தால் தலை தெறிக்க ஓடிவிடுவீங்க..!


இப்போதெல்லாம் மது அருந்துவதென்பது ஒரு மானப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஆம் ஆண் என்பவர் கட்டாயம் மது அருந்த வேண்டும் எனவும் அவ்வாறு அருந்தாதவர்கள் ஆணாக இருக்கத் தகுதி அற்றவர்கள் எனவும் ஒரு கருத்து இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

அத்துடன் குடிப்பழக்கத்திற்கு அடிமையற்றவர்களை கேலிக்கு உட்படுத்தி அவர்கள் கூச்சமுறும் வகையில் கதை பேசுவதும் இப்போது வழமையாகிவிட்டது.

இது இவ்வாறிருக்க, இந்த குடிப்பழக்கத்தால் எமது உடலுக்கு என்ன நேர்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒருவரது உடலில் சிறிதளவு மதுசாரம் கலக்க ஆரம்பித்தவுடனேயே அதன் விளைவுகளும் தோன்ற ஆரம்பிக்கின்றன. மது எப்போதுமே உடலுக்கு கேடு தான் விளைவிக்கும். அது என்ன எனக் கேட்கின்றீர்களா?

ஒருவர் மது அருந்த ஆரம்பிக்கும் போது அவரது உடலில் உணவை சமிபாடடையச் செய்வதற்கென சுரக்கும் நொதியம் சுரக்கஆரம்பிக்கும். குடிப்பழக்கம் அதிகரிக்க அதிகரிக்க இந்த நொதியச் சுரப்பும் அதிகரிக்கும். இவ்வாறு நொதியம் சுரக்க ஆரம்பிப்பதென்பது உடம்பில் அழற்சியை ஏற்படுத்தும். இது காலப் போக்கில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

உடலில் சேரும் கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்களை வெளியேற்றும் வேலையைச் செய்யும் ஈரல் இந்த மதுப்பழக்கத்தால் செயலற்றுப் போகும் நிலை ஏற்படும்.

மது அருந்தும் பழக்கத்தால் கணையம் செயலற்றும் போகும். இதனால் இன்சுலின் சுரப்பது தடைபடுவதோடு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

உடலினுள் கலக்கும் மதுசாரத்தால் நரம்பு மண்டலம் பெரிதும் பாதிப்படைகின்றது. இதனால், தெளிவற்ற பேச்சு ஏற்படும். காலப்போக்கில், கை மற்றும் கால்களில் உணர்வு அற்றும் போகும் நிலை ஏற்படும்.


குடிப்பழக்கத்திற்கு அடிமையாவது போலவே குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவதும் மிகக் கடினமாகும். சில சமயங்களில் இது உயிருக்கே ஆபத்தாகக் கூட முடியும். அதனால், குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முறைப்படி பயிற்சி பெற்ற நிபுணர்களை அணுகுதல் வேண்டும்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையாக ஆரம்பித்தால் சமிபாட்டுத் தொகுதி பாதிப்படையும். எனினும், இந்த பாதிப்பு ஆரம்பத்திலேயே வெளிக்காட்டப் படாது. உடலுக்குள் கணிசமான அளவு பாதிப்பு ஏற்பட்டதன் பின்னரே இந்த பாதிப்பு வெளியில் தென்படஆரம்பிக்கும். மது காரணமாக குடலின் உட்திசுக்கள் பாதிப்படையும்.

இதனால் விட்டமின்கள் மற்றும் கனியுப்புக்களை உறிஞ்சுவதில் பாதிப்பு ஏற்படும். அத்துடன் இது சமிபாட்டுத் தொகுதியை செயலிழக்கச் செய்யும். இதனால் வயிறு ஊதிக் காணப்படுதல், வாயுத் தொல்லை, வாந்திபேதி மற்றும் வலியுடன் மலம் கழித்தல் என்பன ஏற்படும்.

மதுப்பழக்கத்தால் இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்படையும். ஒருங்கே இரத்தஅழுத்தம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, பக்கவாதம் மற்றும் இதயம் பழுதடைதல் என்பனவும் ஏற்படும்.
குடிப்பழக்கத்திற்கு ஆளான ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடு ஏற்படும்.

மது உடம்பில் அதிகம் கலப்பதால் அவர்களுக்கு விறைப்புத் தன்மை குறைவடையும். ஆதே போல மதுவிற்கு அடிமையான பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது நின்று போகும்.

அவர்கள் பிரசவகாலத்தில் மது அதிகளவில் அருந்துவார்களேயானால் குறை மாதப் பிரசவம், கருக் கலைதல் அல்லது குழந்தை வயிற்றிலேயே இறத்தல் என்பன ஏற்படும்.
மதுப் பழக்கம் நோயெதிர்ப்புச் சக்தியை இல்லாதொழிக்கும். இதனால் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அடிக்கடி நோய் வாய்ப்படுவர். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!