இரண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகம்..!


சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ2 கோர் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கின்றன.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் சில தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் மேலும் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருக்கின்றன. கேலக்ஸி ஜெ2 கோர் சாம்சங் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனாகவும், கேலக்ஸி ஏ8 ஸ்டார் மாடல் ஒன்றாக அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஜெ2 கோர் மற்றும் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகலாம் என கூறப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் முறையே SM-J260 மற்றும் SM-G8850 என்ற மாடல் நம்பர்களுடன் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு கோ சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும் மற்ற ஆன்ட்ராய்டு கோ சாதனங்கள் போன்று இல்லாமல், புதிய சாதனம் டச்விஸ் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, 2600 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.

கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன் ஏற்கனவே பலமுறை இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. அதன்படி கிடைத்திருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் 6.28 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ், 220×1080 பிக்சல் இன்ஃபைனைட் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7885 அல்லது ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இத்துடன் 4ஜிபி அல்லது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், 16 எம்பி + 24 எம்பி டூயல் கேமரா செட்டப், டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், 24 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு, ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்படலாம்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!