போதையில் பெண்ணை கார் ஏற்றி கொன்ற இந்திய வம்சாவளி இளைஞர்..!!


இங்கிலாந்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் சைக்கிளிஸ்ட் விக்கி மைரீஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மான்ச்செஸ்டர் நகரில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் பின்னால் வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. அந்த காரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் சிங் ஓட்டி வந்தார்.

அஜய் குடிபோதையில் மிக வேகமாக ஓட்டி வந்துள்ளார். விக்கி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அஜய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வண்டி ஓட்டி கொலை செய்த குற்றத்திற்காக அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் வண்டி ஓட்டுவதற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.


தீர்ப்பு வழங்கிய நீதிபதி கூறுகையில் 24 வயதான விக்கி மிகவும் புத்திசாலி மற்றும் திறமையானவர். அவர் சைக்கிளிங் மீது மிகுந்த ஆர்வம் வைத்திருந்தார். அஜயின் பொறுப்பற்ற தன்மையால் நல்ல பெண்ணின் உயிர் போய்விட்டது என அஜய்க்கு எச்சரிக்கை விடுத்தார்.

விக்கி மையர்சின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அஜய்க்கு தண்டனை கிடைத்த பிறகும் விக்கி இறந்த சோகத்தில் இருந்து இன்னும் மீளவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!