வீட்டில் வைத்து தினமும் வலம்புரிச் சங்குக்கு பூஜை செய்தால் நிகழும் அற்புதம்…!!


சங்கின் வாய்ப் பகுதியில் தொடங்கி சங்கின் சுருள் அமைப்பு, வலப்புறமாக சுற்றி, சங்கின் அடிப்பகுதியில் முடியும் வகையிலான அமைப்பே வலம்புரி சங்கு.இத்தகை சங்கை நம் வீட்டு பூஜை அறையில் வைத்து தொடர்ந்து பூஜை செய்து வந்தால் தோஷங்கள் நீங்கி, செல்வ வளம் அதிகரிக்கும்.

வலம்புரி சங்கை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் வலம்புரி சங்கை நம் வீட்டில் வைத்து முறையாக பூஜித்து வந்தால், அஷ்ட ஐஸ்வர்யத்தையும் தரும் மகாலக்ஷ்மி நம் வீட்டில் வாசம் செய்வாள் என்று வேதங்கள் கூறுகின்றன.


தினமும் வலம்புரி சங்கை வழிபட்டு வந்தால், பிரம்மஹத்தி தோஷம் எனும் கடுமையான தோஷம் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால், அதற்கு சங்கில் மஞ்சள், துளசி கலந்த நீரை, காலை வேளைகளில் வீடுகளில் தெளித்து வர வேண்டும். இதனால் அந்த வீட்டில் உள்ள பாதிப்புகள் விரைவில் நீங்கும்.


செல்வங்கள் மற்றும் வணிகம் செழிக்க, நம் வீட்டில் சங்கை வைத்து, 48 நாட்கள் பூஜை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும் எனக் கருதப்படுகின்றது.

கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் எனும் திங்கள் கிழமைகளில், நூற்று எட்டு, ஆயிரத்து எட்டு என்ற சங்குகளின் எண்ணிக்கையில், அனைத்து சிவன் கோவில்களிலும், சங்காபிஷேகம் நடத்தப்படுவது வழமையானதாகும்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!