ஒரே வாரத்தில் முகப்பருக்களை விரட்டியடிக்கும் நீராவி பேஷியல்!


முகத்தில் பருக்கள் வந்தாலேயே முக அழகு கெட்டுவிடும். ஏனெனில், முகப்பருக்கள் வர ஆரம்பித்தால் அது இல்லாமல் போன பிறகும் கரும் புள்ளிகள் முகத்தில் அப்படியே பதிந்துவிடும்.

கடுமையான வெயிலின் தாக்கம், புகை, தூசு, மாசு போன்றவை முகத்தில் படர்ந்து, முகத்தில் பருக்களை வரவைத்து விடுகின்றன. இந்த முகப்பருக்களை நீராவியைப் பயன்படுத்தி இல்லாதொழிக்கலாம்.


எனினும் தொடர்ந்து நீராவி பிடிப்பது சருமத்திற்கு உகந்ததல்ல என்பதை நினைவில் கொள்ளவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்வது உத்தமம்!

தேவையான பொருட்கள்:
மஞ்சள் தூள்
லவங்க பட்டை
க்ரீன் டீ
தண்ணீர்


கிளென்சர் பயன்படுத்தி முகத்தை அழுக்கில்லாமல் கழுவி கொள்ளவும். பின்னர் ஒரு லீட்டர் தண்ணீர் எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், 3 அல்லது 4 லவங்க பட்டை, ஒரு தேக்கரண்டி கிறீன் டீ ஆகியவற்றை போடவும். பின்னர் அந்த நீரை நன்றாக கலக்கவும். கொதிக்கும் நீர் நல்ல மஞ்சள் நிறத்தில் தோன்றும்.

இவ்வாறு தோன்றியதும், அந்த பாத்திரத்தை அப்படியே இறக்கி நீராவி பிடிக்க ஆரம்பிக்கவும். தண்ணீர் மிக அதிகமாக கொதிக்க கூடாது. அது சருமத்தை சேதமடையச் செய்யும். ஓரளவு ஆவி வரும் அளவுக்கு கொதிக்க வைப்பது நலம்.

இந்த நீராவி பேஷியலைச் செய்ய நாம் பயன்படுத்திய பொருட்களில் அப்படி என்ன தான் இருக்கின்றது எனக் கேட்கின்றீர்களா?

01. கிறீன் டீ – வயது முதிர்வை தடுக்கிறது. சருமம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.


02. மஞ்சள் – மஞ்சளில் இருக்கும் அதிக அளவு சல்பர் அன்டிபயாடிக் போல் செயற்பட்டு பருக்கள் மறைவதற்கு முக்கிய காரணமாகிறது.

03. லவங்க பட்டை – சருமத்தின் துளைகளை திறந்து சருமத்துக்குள் ஊடுருவி சருமத்தை புதுப்பிக்க உதவுகிறது. – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!