வீட்டில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதி!

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணம் ஆரஞ்ச் நகர் நீதிபதி ஜெப்ரி பெர்குசன் (வயது 72). இவரது மனைவி ஷெர்லி பெர்குசன். இந்த தம்பதி அனஹிம் ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், நீதிபதி ஜெப்ரி பெர்குசன் தனது மனைவி ஷெர்லியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இது தொடர்பாக ஜெப்ரியின் மகன் போலீசில் புகார் அளித்துள்ளான்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிபதி ஜெப்ரியை கைது செய்தனர்.

பின்னர், நீதிபதி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேவேளை கைது செய்யப்பட்ட நீதிபதி ஜெப்ரி 1 மில்லியன் டாலர்கள் பிணையில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!