சருமத்திற்கு காய்ச்சாத பாலை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்..?

பாலில் வைட்டமின்பி, ஹைட்ராக்ஸி அமிலங்கள், கால்சியம், சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இதை சருமத்தில் பயன்படுத்தும் போது அவை நாள் முழுக்க சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும்.

முகப்பரு இருக்கும் போது கூட வெறும் பாலை கொண்டே பதமாக தோல் பாதிப்படையாமல் சுத்தமாக்கலாம். எல்லா சருமத்திற்கும் ஏற்ற பாலை நீங்கள் எப்படி எதற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

பால் சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்யும் சிறந்த க்ளென்சிங் என்று சொல்லலாம். முகத்தில் இருக்கும் இறந்த செல்களை சரும பாதிப்பில்லாமல் வெளியேற்றுகிறது. சரும சுத்தம் என்னும் போது அவை முகத்தில் கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவற்றையும் வரவிடாமல் தடுக்கவும் உதவுகிறது என்பதால் இவை எப்போதும் முகத்துக்கு நன்மை செய்யகூடியது.


பச்சை பால் உங்கள் சருமத்திற்கு பல அதிசயங்களை செய்யும். இந்த காரணத்திற்காக, உங்கள் தோல் பராமரிப்பு தேவைகளுக்கு பச்சை பால் பயன்படுத்த அழகு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். மெல்லிய துணி அல்லது பஞ்சை காய்ச்சாத பாலில் நனைத்து சருமம் முழுவதும் படரும் படி தேய்க்க வேண்டும்.

தினமும் செய்து வந்தால் மேக் அப் தேவையில்லை. பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சக்திவாய்ந்தது. சருமத்துக்கு பொலிவை அளிக்க கூடியது. அதனாலேயே இதை இயற்கை மாய்சுரைசர் என்று அழைக்கிறோம்.

சருமத்தில் ஈரப்பசை இல்லாவிட்டால் அவை வறட்சிக்குள்ளாகும். அதனால் எப்போதும் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உரிய பராமரிப்பு செய்ய வேண்டியிருக்கும். இது உங்கள் சருமத்தை பிரகாசமாக்குகிறது, நீரேற்றத்தை அதிகரிக்கிறது, சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் மற்றும் வயதானதை குறைக்கிறது.

பச்சை பால் மற்றும் ரோஸ் வாட்டர் பேஸ் பேக் சரும டோனராக செயல்படுகிறது. சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது, சருமத்தை இறுக்கமாக்குகிறது, சரும தொய்வைத் தடுக்கிறது மற்றும் வயதானதைத் தடுக்கிறது. இரண்டு டேபிள்ஸ்பூன் பச்சை பாலில் நான்கு முதல் ஐந்து சொட்டு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

உங்கள் முகத்தை சுத்தம் செய்த பிறகு ஒரு பருத்தி பந்தைப் பயன்படுத்தி இந்த கலவையை முகத்தில் போடவும். 15 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை சாதாரண அல்லது வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த முறையை இரவில் போட்டு விட்டு காலையிலேயும் கழுவலாம்.

காய்ச்சாத பால் 1 தேக்கரண்டி எடுத்து பஞ்சு உருண்டைகளை அதில் 2 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு உங்கள் சருமம் முழுவதும் முகம், கண்கள் சுற்றி, வாய்ப்பகுதியைச் சுற்றி, கழுத்து போன்ற இடங்களில் தடவி கொள்ளுங்கள்.

இவை காய்ந்ததும் நன்றாக உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் மூன்று முறையாவது இதை செய்து வந்தால் கோடையிலும் முகம் ஓஹோ அழகுதான்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!