சாலையில் சென்ற 19 அடி நீள மலைப்பாம்பை கையால் பிடித்த வாலிபர்கள்!

அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தை சேர்ந்தவர் ஜேக் வாலேரி. 22 வயதான இவர் ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். கடந்த 10-ந்தேதி இவர் அந்த பகுதி வழியாக சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது பெரிய மலைப்பாம்பு ஒன்று சாலையோரமாக செல்வதை கண்ட இவரும், இவரது நண்பர் ஸ்டீபனும் சேர்ந்து வெறும் கைகளாலேயே பாம்பை பிடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.


பாம்பை கண்டதும் ஜேக் அதன் வாலை பிடித்து இழுக்கிறார். அப்போது பாம்பு அவரை கடிக்க முயற்சிக்கிறது. உடனே அவர் வாலை விட்டு விட்டு பாம்பின் வாயை முழு பலத்துடன் பிடித்து கொள்கிறார். அப்போது பாம்பு அவர் உடலை சுற்றுகிறது.

உடனே அவரது நண்பர் ஓடி வந்து ஜேக்கை மீட்டதோடு பாம்பையும் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஜேக் வாலேரி கூறுகையில், இவ்வளவு பெரிய பாம்பை பிடிக்க முடிந்தது மிக பெரிய விஷயம்.

கடந்த ஆண்டு நானும், எனது உறவினரும் 18 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தோம். இவ்வளவு பெரிய பாம்புகளை நம்மால் கையாள முடியும் என்பதை அப்போது உணர்ந்தோம் என்றார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!